உன் பேச்சினில் மயங்கியதால்
இன்று ஊமையாகி கண்ணீர் வடிக்கின்றேன் நானடா
காரணம் இன்றி கதறுகின்றேன்
காரணம் கேட்டால் சினக்கின்றேன்
உன்னை பல நேரம் நேசிக்கின்றேன்
சில நேரம் வெறுக்கின்றேன்
இருந்தும் உன் நினைவு என்னை ஆக்கிரமித்து
அட்டகாசம் பண்ணுதடா
இரக்கம் இல்லா அரக்கன் நீயடா
இருந்தும் உந்தன் பின்னால் என் நினைவு அலையுதடா
அலைபாயும் என் மனதில் உன் நினைவு
அலை அலையாய் வந்து முட்டி மோதுதடா
ஒரு வார்த்தை சொல்லிவிடுடா
உந்தன் உயிர் நான் என்று
எந்தன் ஜீவன் வாழ்ந்துவிடுமடா
















