ஒரு வார்த்தை சொல்லிவிடு

svr.pamini


உன் பேச்சினில் மயங்கியதால்
இன்று ஊமையாகி கண்ணீர் வடிக்கின்றேன் நானடா
காரணம் இன்றி கதறுகின்றேன்
காரணம் கேட்டால் சினக்கின்றேன்
உன்னை பல நேரம் நேசிக்கின்றேன்
சில நேரம் வெறுக்கின்றேன்
இருந்தும் உன் நினைவு என்னை ஆக்கிரமித்து
அட்டகாசம் பண்ணுதடா
இரக்கம் இல்லா அரக்கன் நீயடா
இருந்தும் உந்தன் பின்னால் என் நினைவு அலையுதடா
அலைபாயும் என் மனதில் உன் நினைவு
அலை அலையாய் வந்து முட்டி மோதுதடா
ஒரு வார்த்தை சொல்லிவிடுடா
உந்தன் உயிர் நான் என்று
எந்தன் ஜீவன் வாழ்ந்துவிடுமடா


svrpamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates